search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருத்தணி முருகன் கோவில்"

    • திருத்தணி கோவிலில் தற்போது மாசி கிருத்திகை விழா தொடங்கி நடந்து வருகிறது.
    • திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் எண்ணப்பட்டது.

    திருத்தணி:

    திருத்தணி முருகன் கோவில் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசித்து செல்கிறார்கள். திருத்தணி கோவிலில் தற்போது மாசி கிருத்திகை விழா தொடங்கி நடந்து வருகிறது. இதனால் தினந்தோறும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்யும் பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் பணம், நகை, ஆகியவற்றை செலுத்தி செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் எண்ணப்பட்டது. மலைக்கோயிலில் தேவர் மண்டபத்தில் துணை ஆணையர் விஜயா முன்னிலையில் கோயில் ஊழியர்கள் இதில் ஈடுபட்டனர். இதில் கடந்த 20 நாட்களில் மட்டும் உண்டியல் காணிக்கையாக ரூ.1 கோடியே 2 லட்சத்து 16 ஆயிரத்து 521 ரொக்கம் மற்றும் 612 கிராம் தங்கம், 10 கிலோ 487 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்து இருந்தது. இந்த தகவலை கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தைகிருத்திகையையொட்டி அதிகாலை மூலவருக்கு பால், விபூதி, பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உட்பட, பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன.
    • திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    திருத்தணி:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் இன்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

    இந்நிலையில் தை கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலில் இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதனால் மலைக்கோவில் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது.

    தைகிருத்திகையையொட்டி இன்று அதிகாலை மூலவருக்கு பால், விபூதி, பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உட்பட, பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன.

    இதை தொடர்ந்து தங்கவேல், தங்க கீரிடம் உட்பட, வைர ஆபரணங்களால் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடந்தது.

    மேலும் காவடி மண்டபத்தில், உற்சவர் முருகப் பெருமானுக்கு, சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    ஏராளமான பக்தர்கள் மயில் காவடி, பால் காவடி, பன்னீர் காவடி, மலர் காவடி, மற்றும் அலகு குத்தி நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    • அனைத்து அபிஷேகமும் கடந்த ஆண்டு வரை ரத்து செய்யப்பட்டன.
    • கியூஆர் கோடு விளம்பர பலகைகள் வைத்துள்ளனர்.

    அறுபடைகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோவிலுக்கு நாள் தோறும் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர்.

    சில பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், திருக்கல்யாணம், தங்கத்தேர், கேடயம் உள்ளிட்ட வேண்டுதலை நிறைவேற்ற சேவா கட்டணம் செலுத்துவது வழக்கம்.

    அபிஷேகம், சேவா டிக்கெட்டுகள் கடந்த, 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஆன்லைன் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக மேற்கண்ட அனைத்து அபிஷேகமும் கடந்த ஆண்டு வரை ரத்து செய்யப்பட்டன.

    அரசு வழிகாட்டுதலுடன் கடந்த ஜனவரி மாதம் முதல் மீண்டும் அபிஷேகம், சேவா டிக்கெட்டுகள் பக்தர்களுக்கு மலைக்கோவிலில் நேரில் வருபவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது.

    இதனால், பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற இருமுறை திருத்தணி மலைக்கோவிலுக்கு வந்து செல்ல வேண்டி இருந்தது.

    இந்த நிலையில் திருத்தணி முருகன் கோவிலில் மீண்டும் ஆன்லைன் மூலம் அபிஷேகம் மற்றும் சேவா டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பக்தர்கள் https://tiruttanigaimurugan, hrce.gov.in என்ற இணையதளம் மூலம் மேற்கண்ட டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை பணம், தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றினால் மலைக்கோவிலில் உள்ள உண்டியல்களில் மட்டும் செலுத்தி வந்தனர்.

    தற்போது கோவில் நிர்வாகம் கியூ ஆர்கோடு ஸ்கேன் மூலம் நன்கொடை, காணிக்கைகள் செலுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதற்காக மலைக்கோவிலில், தேர்வீதியில் நான்கு இடங்களில் கியூஆர் கோடு விளம்பர பலகைகள் வைத்துள்ளனர்.

    இனிவரும் நாட்களில் பக்தர்கள் பணமாக இல்லாமல் மொபைல் போன் மூலம் கியூ ஆர்கோடு ஸ்கேன் செய்து காணிக்கைகள். நன்கொடைகள் செலுத்தலாம். இதற்கு பக்தர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

    இதேபோல் ஆன்லைன் மூலம் தரிசனம் டிக்கெட் வழங்க கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இன்று பிற்பகல் 2.39 மணியளவில் சந்திர கிரகணம் தொடங்குகிறது.
    • பக்தா்கள் தொடா்ந்து தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    முருகன்கோவில்களில் ஆறுபடை வீடுகளில் 5-ம் படை வீடாக திருத்தணி சுப்ரமணியசாமி கோவில் உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில் இன்று (8- ந்தேதி) பிற்பகல் 2.39 மணியளவில் சந்திர கிரகணம் தொடங்குகிறது. முழு சந்திர கிரகணம் பிற்பகல் 3.46 மணியளவில் தொடங்கி 5.12 மணி வரை இருக்கும். பின்னா் பகுதி அளவு சந்திர கிரகணம் 6.19 மணியளவில் முடிவடைகிறது.

    சந்திர கிரகணத்தையொட்டி பெரும்பாலான கோவில்களில் நடை அடைக்கப்பட்டு, பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.

    ஆனால், திருத்தணி முருகன் கோவிலில் மட்டும் சந்திர கிரகணத்தின் போதும், கோவில் நடை திறந்து பக்தா்கள் தொடா்ந்து தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    திருத்தணி முருகன் கோவிலில் வழக்கம் போல் காலை 6 மணி முதல் இரவு 8.45 மணி வரை தொடா்ந்து பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்யலாம்.

    கிரகணத்தை யொட்டி, பரிகார பூஜைகள் முன் கூட்டியே நடத்தப்படுவதால் சூரிய, சந்திர கிரகணத்தின் போது, நடை அடைக்கப்படுவதில்லை என்று கோவில் நிா்வாகத்தினர் தெரிவித்தனர்.

    திருவள்ளூரில் உள்ள வைத்திய ‌‌வீரராகவ பெருமாள் கோவிலில் சந்திர கிரகணத்தையொட்டி இன்று காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மட்டும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். பிற்பகல் 12 மணி முதல் கோவில் நடை அடைக்கப்படுகிறது.

    பின்னர் மீண்டும் நாளை (9-ந்தேதி) காலை முதல் வழக்கம்போல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

    • கந்தசஷ்டி விழா நாளை தொடங்கி வருகிற 31-ந்தேதி வரை நடை பெறுகிறது.
    • திருத்தணி கோவிலில் சூரசம்ஹாரத்திற்கு பதில் புஷ்பாஞ்சலி நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    ஆனால் திருத்தணி முருகன் கோவிலில் தொடங்கப்படவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை திருத்தணி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா லட்சார்ச்சனையுடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி மூலவருக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

    திருத்தணி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நாளை தொடங்கி வருகிற 31-ந்தேதி வரை நடை பெறுகிறது. இதையொட்டி தினந்தோறும் மூலவர் முருகப்பெருமான் புஷ்ப அலங்காரம், பட்டு அலங்காரம், தங்கக்கவசம், திருவாபரணம், சந்தன காப்பு உள்ளிட்ட அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். வருகிற 30-ந்தேதி மாலையில் சண்முகப்பெருமானுக்கு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியும், 31-ந்தேதி காலையில் உற்சவர் திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது.

    அறுபடை வீடுகளில் முருகன் கோவில்களில் கடைசி நாளில் சூரசம்ஹாரம் நடைபெறும். ஆனால் திருத்தணி கோவிலில் மட்டும் புஷ்பாஞ்சலி நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கந்த சஷ்டி விழா நடை பெறும் நாட்களில் காலை மற்றும் மாலை இரு வேளைகளில் தேவாரபாராயணம் நடைபெறுகிறது.

    • திருத்தணி முருகன் கோவிலுக்கு அண்டை மாநிலங்களிலிருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசித்துவிட்டு செல்கின்றனர்.
    • பக்தர்கள் அனைவரும் மலைக்கோயிலில் மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு காணிக்கையாக உண்டியலில் பணம், நகை, ஆகியவற்றை செலுத்துகின்றனர்.

    திருத்தணி:

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ளது ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகத் திகழும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இந்த திருக்கோயிலுக்கு தமிழக மட்டும் அண்டை மாநிலங்களிலிருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசித்துவிட்டு செல்கின்றனர்.

    பக்தர்கள் அனைவரும் மலைக்கோயிலில் மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு காணிக்கையாக உண்டியலில் பணம், நகை, ஆகியவற்றை செலுத்துகின்றனர். பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தப்படும் உண்டியல் பணம், திருத்தணி முருகன் மலைக்கோயிலில் தேவர் மண்டபத்தில் கோவில் துணை ஆணையர், செயல் அலுவலர் விஜயா, கோயில் தக்கார் ஜெயப்பிரியா ஆகியோர் முன்னிலையில் திருக்கோயில் பணியாளர்களைக் கொண்டு உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

    இதில் 13 நாட்களில் 63 லட்சத்து 65 ஆயிரத்து 549 ரூபாய் ரொக்கம் மற்றும் 365 கிராம் தங்கம், 5357 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாக செலுத்தியிருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கடந்த 33 நாட்களில் உண்டியல் பணம் மூலம் ரூ.1 கோடியே 24 லட்சத்து 91 ஆயிரத்து 368 ரூபாய் பணமும், தங்கம் 1060 கிராமும், வெள்ளி 11 ஆயிரத்து 700 கிராமும் காணிக்கையாக கிடைத்தது.

    திருத்தணி:

    திருத்தணியில் உள்ள முருகன் கோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசித்து செல்கின்றனர்.

    பக்தர்கள் மலைக்கோவிலில் மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு காணிக்கையாக உண்டியலில் பணம் செலுத்துவது வழக்கம். இந்த நிலையில் திருத்தணி கோவிலில் உள்ள உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது.

    மலைக்கோவிலில் உள்ள தேவர் மண்டபத்தில் கோவில் துணை ஆணையர், செயல் அலுவலர் விஜயா, கோயில் தக்கார் ஜெயப்பிரியா ஆகியோர் முன்னிலையில் கோவில் பணியாளர்கள் உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

    இதில் கடந்த 33 நாட்களில் உண்டியல் பணம் மூலம் ரூ.1 கோடியே 24 லட்சத்து 91 ஆயிரத்து 368 ரூபாய் பணமும், தங்கம் 1060 கிராமும், வெள்ளி 11 ஆயிரத்து 700 கிராமும் காணிக்கையாக கிடைத்தது.

    • திருத்தணி முருகன் கோவில் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகத் திகழுகிறது.
    • புதுமண ஜோடியும், அவர்களது உறவினர்களும் கோவிலில் தரிசனம் செய்ய ஒரே நேரத்தில் குவிந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.

    திருவள்ளூர்:

    திருத்தணி முருகன் கோவில் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகத் திகழுகிறது.

    முருகப்பெருமான் மணக்கோலத்தில் காட்சி அளிப்பதால் வெளியூர்களில் இருந்து வரும் புதுமண ஜோடிகள் திருத்தணி பகுதியில் அதிக அளவில் திருமணம் செய்து முருகப்பெருமானை தரிசித்து செல்கிறார்கள். இதனால் முகூர்த்த தினங்கள் கோவிலில் கூட்டம் அலைமோதும்.

    இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் திருத்தணி கோவிலில் சுமார் 30-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.

    இதேபோல் கோவிலை சுற்றி உள்ள சுமார் 70 மண்டபங்களில் திருமணம் நடைபெற்றது. இதனால் நேற்று இரவு முதலே திருமண கோஷ்டியினர் திருத்தணியில் பஸ், கார்களில் வந்து குவிந்தனர்.

    இதன் காரணமாக திருத்தணி நகரில் அனைத்து இடங்களிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    புதுமண ஜோடியும், அவர்களது உறவினர்களும் கோவிலில் தரிசனம் செய்ய ஒரே நேரத்தில் குவிந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.

    • பக்தர்கள் காணிக்கையாக செலுத்தப்படும் உண்டியல் பணம் எண்ணும் பணி திருத்தணி முருகன் மலைக்கோவிலில் தேவர் மண்டபத்தில் நடைபெற்றது.
    • கோவில் துணை ஆணையர், செயல் அலுவலர் விஜயா, கோவில் தக்கார் ஜெயப்பிரியா ஆகியோர் முன்னிலையில் பணியாளர்களைக் கொண்டு உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது.

    திருத்தணி:

    திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசித்து விட்டு செல்கின்றனர்.

    பக்தர்கள் அனைவரும் மலைக்கோவிலில் மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு காணிக்கையாக உண்டியலில் பணம், நகை, ஆகியவற்றை செலுத்துகின்றனர்.

    பக்தர்கள் காணிக்கையாக செலுத்தப்படும் உண்டியல் பணம், திருத்தணி முருகன் மலைக்கோவிலில் தேவர் மண்டபத்தில் கோவில் துணை ஆணையர், செயல் அலுவலர் விஜயா, கோவில் தக்கார் ஜெயப்பிரியா ஆகியோர் முன்னிலையில் பணியாளர்களைக் கொண்டு எண்ணும் பணி நடைபெற்றது.

    இதில் கடந்த 24 நாட்களில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.1 கோடியே 38 லட்சத்து 93 ஆயிரத்து 359 ரூபாய் பணமும், தங்கம் 320 கிராமும், வெள்ளி 11 ஆயிரத்து 480 கிராமும் காணிக்கையாக செலுத்தி இருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மூலவருக்கு தங்க கிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டது.
    • சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர்.

    திருத்தணி கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூரவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர விழா இன்று நடைபெற்றது.

    இதையொட்டி மூலவருக்கு அதிகாலை, 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து, தங்க கிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, மூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

    ஆடிப்பூரத்தையொட்டி சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். இதனால் பக்தர்கள் பொதுவழியில் மூலவரை தரிசிக்க சுமார் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    ஆயிரக்கணக்கான பக்தர்கள் உடல் முழுவதும், அலகு குத்தியும், காவடிகள் மற்றும் பால்குடம் எடுத்தும் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

    வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பஸ், கார்களில் படையெடுத்து வந்ததால் திருத்தணி நகரம் முழுவதும் போக்குவரத்து நெரிசலாக காணப்பட்டது. மலைக்கோவில் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. திருத்தணி டி.எஸ்.பி., விக்னேஷ் உத்தரவின் பேரில், திருத்தணி இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில்போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • கடந்த 26-ந் தேதி மாடவீதியில் உள்ள 5 கடைகள் நடத்தும் நபர்களிடமிருந்த கடை சாவிகள் கோவில் வசம் ஒப்படைக்கப்பட்டது.
    • மாடவீதியிலிருக்கும் கடைகளின் மேற்கூரைகள் கோவில் நிர்வாகம் மூலம் அகற்றும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    திருத்தணி:

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மலைமேல் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கடைகள் கட்டப்பட்டு பொது ஏலத்தின் மூலம் வாடகைக்கு விடப்பட்டு வருகிறது. அந்த வகையில், மலைக்கோவில் மேல் உள்ள மாடவீதியில் கோவில் நிர்வாகம் சார்பில் மலர் அங்காடி, விற்பனை நிலையம், தேங்காய் கடை, குளிர்பான கடை உள்ளிட்ட 5 கடைகள் ஆண்டுதோறும் ஏலம் விடப்பட்டு அதன் மூலம் வரும் வருவாய் கோவில் கணக்கில் சேமிப்பு வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்து அறநிலையத்துறை முருகன் கோவில் மாடவீதியை விரிவாக்கம் செய்யும் பணிகள் விரைவில் தொடங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதன்காரணமாக கடந்த மாதம் நடைபெற்ற ஏலத்தில் மலைக்கோவில் மாடவீதியில் உள்ள 5 கடைகள் குறித்து அறிவிக்கவில்லை. இந்நிலையில் கடந்த 26-ந் தேதி மாடவீதியில் உள்ள 5 கடைகள் நடத்தும் நபர்களிடமிருந்த கடை சாவிகள் கோவில் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் மாடவீதியிலிருக்கும் கடைகளின் மேற்கூரைகள் கோவில் நிர்வாகம் மூலம் அகற்றும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து கோவில் அதிகாரியிடம் கேட்டபோது, திருத்தணி முருகன் கோவிலில் விசேஷ நாட்களில் முருகப்பெருமான் தேரில் எழுந்தருளி உலா வரும் மாடவீதியின் அகலம் குறுகிய அளவில் உள்ளதால் தேரில் வீதியுலா வருவதில் சிரமம் உள்ளது. எனவே மாடவீதியை விரிவாக்கம் செய்ய இந்து அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என தெரிவித்தார்.

    • மங்கல பொருட்களை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வந்து சமர்ப்பித்தனர்.
    • பட்டு வஸ்திரங்கள், மங்கல பொருட்களை திருத்தணி கோவில் அர்ச்சகர் பெற்றுக்கொண்டார்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ஒவ்வொரு ஆண்டும் ஆடிக்கிருத்திகை அன்று திருத்தணி முருகன் கோவிலுக்கு பட்டு வஸ்திரங்கள் மற்றும் மங்கல பொருட்களை வழங்கி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு ஆடிக்கிருத்திகையான நேற்று திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பட்டு வஸ்திரங்கள் மற்றும் மங்கல பொருட்கள் சமர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி திருத்தணியில் நடந்தது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, அவருடைய மனைவி சொர்ணலதாரெட்டி மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் சகிதமாக வந்து திருத்தணி முருகன் கோவிலுக்கு பட்டு வஸ்திரங்கள், மஞ்சள், குங்குமம், லட்டு, பழம், வெற்றிலைப் பாக்கு உள்ளிட்ட மங்கல பொருட்களை மூங்கில் தட்டுகளில் வைத்து தலையில் சுமந்தபடி மேள தாளம் மங்கல வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக வந்து சமர்ப்பித்தனர்.

    பட்டு வஸ்திரங்கள் மற்றும் மங்கல பொருட்களை திருத்தணி முருகன் கோவில் அர்ச்சகர் பெற்றுக்கொண்டார். அந்தப் பட்டு வஸ்திரங்கள் உற்சவர்களான வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியசாமிக்கு அணிவித்து, அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் அறங்காவலர் குழு தலைவரும், அவருடைய மனைவியும் மூலவர் மற்றும் உற்சவர்களை தரிசனம் செய்தனர். அவர்களுக்கு திருத்தணி முருகன் கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது. பொன்னாடை போர்த்தியும் கவுரவித்தனர். முன்னதாக திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்த திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டியை கோவில் நிர்வாகிகள் மற்றும் அர்ச்சகர்கள் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.

    மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது

    ×